சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

 

இந்திய மொழிகளின் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு தேசிய அளவில் 24 மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருதுகளை வழங்கி வருகிறது. நாவல், சிறுகதை, சிறந்த மொழிபெயர்ப்பு என ஆறு துறைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப் படுகிறது. அதில் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் மொழிபெயர்த்த நூலிற்கு விருது அறிவிக்கப் பட்டிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எழுத்தாளர் கே.வி. ஜெஸ்ரீ க்கு அறிவிக்கப் பட்டுள்ளது. மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்த்து 2016 இல் ”நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற நாவலை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. தற்போது இந்த நூலுக்குத்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

வளர்ந்து வரும் மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூரின் நாவல் பண்டைய தமிழ் மன்னன் பாரியின் படுகொலையை எழுத்துக் களமாக கொண்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கே.வி. ஜெயஸ்ரீ கேராளவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் சிறுவயது முதல் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார். பள்ளி, கல்லூரி படிப்புகளை திருவண்ணாமலையில் முடித்திருக்கிறார். தற்போது பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் பல மலையாள படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது கணவர் உத்திரகுமார் அரசியல் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்

அமெரிக்க அதிபரின் மனைவியாக வலம் வரும் மெலானியாவின் வாழ்க்கை மிகவும் சுவாரசியம் நிறைந்தது மட்டுமின்றி வலிமை வாய்ந்ததாகவும் இருக்கிறது

டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..!

வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 160 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் நேற்று அவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு

இயக்குனர் விஜய் மீது குற்றச்சாட்டு: பதிவு செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் திடீர் நீக்கம்

'தலைவி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து பதிவு செய்யப்பட்ட பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றினை அந்த படத்தில் பணிபுரிந்த எழுத்தாளர் அஜயன் பாலா

'இந்தியன் 2' விபத்து: லைகாவுக்கு கமல் எழுதிய கடிதம்!

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்