close
Choose your channels

ரஜினியுடன் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி சந்திப்பு: முக்கிய் ஆலோசனை!

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், திரு. தமிழருவி மணியன் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணிகளில் இறங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் ரஜினியை சற்றுமுன் சந்தித்து உள்ளனர். ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில் இன்று அவர்கள் முக்கிய ஆலோசனை செய்துள்ளதாக தெரிகிறது. இன்றைய ஆலோசனைக்கு பின் ஒரு சில அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊடகங்கள் ரஜினியின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.