ரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்?

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். மேலும் கட்சி வேலை என்பது பிரமாண்டமான வேலை என்றும், அதனை செய்வதற்கு இருவரை தான் நியமனம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அவர்களை நியமனம் செய்வதாகவும், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி அவர்கள் செயல்படுவார் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். அர்ஜூனமூர்த்தி அவர்கள் எனக்கு கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% உள்ளது என்றும், அதை முடித்து கொடுக்க வேண்டியது தனது கடமை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி அவர்கள் கூறியபோது, மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜினி மக்கள் மன்றம் தயாராக உள்ளது என்றும், எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றும் கூறினார்.

More News

வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி

சற்றுமுன்னர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது

ஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 'தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார் 

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் அரசியலுக்கு வருவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன்

நான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த கால்சென்டர் டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் யார்

தமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமாரின் டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது