close
Choose your channels

சிரஞ்சீவியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை!

Saturday, October 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிரஞ்சீவி நடித்த 151வது திரைப்படமான ’சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சிரஞ்சீவி அவர்கள் நேரில் சந்தித்து தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதுமட்டுமின்றி தனது படமான ’சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தை தமிழிசை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரஞ்சீவியின் இந்த வேண்டுகோளை தமிழிசை அவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் குடும்பத்துடன் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்தை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.