close
Choose your channels

தெருக்கடையில் டீ அருந்திய முதல்வர்… பூரிப்போடு செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையோரக் கடையில் அமர்ந்து அதிகாரிகளுடன் தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது தனிக்கவனம் பெற்றுவருகின்றன.

சென்னையில் மழை, வெள்ளப்பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல்வர், தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாம்களைத் துவங்கி வைத்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து மாம்பாக்கத்தில் இருந்து முடிச்சூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாலையோர தேநீர் கடைக்குச் சென்ற முதல்வர், அருகில் இருந்தவர்களிடம் மழை, வெள்ளப் பாதிப்புகளை பற்றி கேட்டறிந்தார். மேலும் அந்தக் கடையில் முதல்வர் தேநீர் அருந்தியபோது அங்குள்ள பொதுமக்கள் அவருடன் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது தனிக்கவனம் பெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.