முதல்வர்-சபாநாயகர் அவசர சந்திப்பு: 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடனும் திடீர் ஆலோசனை

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

ஏற்கனவே அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் இன்று முதல் தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகி அதற்கு தற்போது 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய அரசியல் குழப்பங்கள் குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார்.
இப்போதுள்ள நிலையில் ஆட்சி கவிழும் நிலை இருப்பதால் முதல்வர்-சபாநாயகர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்று 9 மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடனும் முதல்வர் பழனிச்சாமி முக்கிய ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் கட்சி மற்றும் ஆட்சி குறித்து முக்கிய முடிவை முதல்வர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தினகரனும், சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையேயான இந்த போட்டி எதில் முடியும் என்று தெரியாத நிலைதான் இப்போதைக்கு உள்ளது.
இருப்பினும் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரை இப்போதைய அரசுக்கு ஆபத்து இருக்காது என்றே கருதப்படுகிறது.

More News

தினகரனுக்கு குவியும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு: சென்னையில் ஒரு கூவத்தூர்?

திகார் ஜெயில் இருந்து திரும்பி வந்த தினகரன் நேற்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தது முதலே தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கலையரசன் - தன்ஷிகாவின் 'உரு'. திரை முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' வெற்றிப்படத்தில் நடித்த கலையரசன் மற்றும் தன்ஷிகா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'உரு'. தமிழில் வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை விக்கி ஆனந்த் இயக்கியுள்ளார். கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, ஜெயபாலன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இ&

தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏக்கள்: விரைவில் சட்டமன்ற தேர்தலா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த அதிமுக, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இழந்தது...

சாக்லேட் வியாபாரியின் வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.18 கோடி

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது.

நயன்தாராவின் பயந்தாங்கொள்ளி கணவரா விஜய்சேதுபதி?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.