ரூ.20 கோடி மோசடியா? தீபாவிடம் போலீஸ் விசாரணை

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஜெ.தீபா. இவரது வீட்டின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டர்கள் குவிந்ததை அனைவரும் அறிவர்.

ஆனால் அதன்பின்னர் தீபா ஆரம்பித்த பேரவையை எதிர்த்து அவரது கணவரே குரல் கொடுத்தது மட்டுமின்றி அவரும் தனியாக கட்சி தொடங்கியது, கணவரை தீபா வீட்டை விட்டு விரட்டியதாக வெளிவந்த செய்தி ஆகியவற்றால் தீபாவின் செல்வாக்கு குறைய தொடங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபா தொடங்கிய 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வசூலான பணத்தில் 20 கோடி ரூபாயை தீபா மோசடி செய்ததாக ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று தீபாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, 'தனது பேரவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகவும், தன் மீது புகார் அளித்தவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ஆளுங்கட்சியின் தூண்டுதல் பெயரிலும், என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பொய்ப்புகார் கொடுக்கபப்ட்டுள்ளதாக கூறினார். மேலும் தன்மீதான புகாரை தான் சட்டப்படி சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மாயா', 'டோரா'வை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு நாயகி சப்ஜெக்ட் திரைப்படம் 'அறம்'...

விவசாயிகளுக்காக செயலில் இறங்கிய நடிகை சினேகா

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

இரண்டாவது வாரத்திலும் பவரான வசூல் செய்த 'பவர்பாண்டி'

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'பவர்பாண்டி' படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்பதை பார்த்தோம்.

சிபிராஜின் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவ காணோம்' படங்களுக்கு அடுத்து சிபிராஜ் தற்போது 'நாளைய இயக்குனர்' புகழ் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

'பாகுபலி'யை அடுத்து மீண்டும் பிரமாண்டமான படத்தில் பிரபாஸ்

இந்தியாவின் பிரமாண்ட திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களுக்காக சுமார் ஐந்து வருடங்கள் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது மீண்டும் பிரமாண்டமாக தயாராகி வரும் ஒரு மும்மொழி படத்தில் நடித்து வருகிறார்...