close
Choose your channels

ஒரே தொகுதியில் களமிறங்கும் கனிமொழி, தமிழிசை, ராதிகா?

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் ஸ்டெர்லைட் பிரச்சனை தொகுதியான தூத்துகுடி இம்முறை நட்சத்திர தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என கடந்த ஒரு வருடமாகவே கூறப்பட்டு வருகிறது. கனிமொழியும் அடிக்கடி இந்த தொகுதிக்கு விசிட் செய்து வருகிறார்.

அதேபோல் அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்தி வெளிவந்துள்ளது.

மூன்று நட்சத்திர பெண் வேட்பாளர்கள் தூத்துகுடியில் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்துள்ளதால் இப்போதே அந்த தொகுதியில் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. மூவரில் தூத்துகுடி மக்களின் மனங்களை கவர்ந்தவர் யார் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.