close
Choose your channels

பிரபல கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சசிகலா…

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் விலகைத் தொடர்ந்து திருமதி சசிகலா முதல் முறையாக வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்க சன்னதி கொண்ட தலமாகும். மேலும் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் இது கருதப்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வருகை தந்த சசிகலா அங்குள்ள 27 நட்சத்திர லிங்க சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தியதோடு அங்குள்ள ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டுள்ளார்.

தொடர்ந்து பிரகத் சுந்தர குஜாம்பாள் சன்னதிக்கும் சசிகலா சென்று வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக 4 ஆண்டு சிறை சென்ற திருமதி சசிகலா அரசியலில் களம் காண்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலை விட்டு விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.