சிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பிற்கு அஜித், தனுஷ் பட நடிகை கண்டனம்

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் கல்வியாண்டு குறையும் என்பதால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக நேற்று அறிவித்தது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பாடக்குறைப்பு என்பது இந்த கல்வியாண்டுக்கு மட்டுமே என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.

மேலும் இந்த பாடக்குறைப்பு என்பது ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை, உணவு பாதுகாப்பு, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, ஜாதி, மதம், பாலினம் ஆகிய பாடங்களாக இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனும் இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் அஜித்தின் ‘ஆரம்பம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை டாப்சி இதுகுறித்து கூறியதாவது:

’ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பை நான் தவறவிட்டு விட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்துக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் என்பது இருக்காது’ என்று தெரிவித்துள்ளார். டாப்சியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

மரண பீதியை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக்!!! இந்தியாவுல கூட இருந்ததா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

சீனாவின் மங்கோலியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புபோனிக் பிளேக் எனப்படும் புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவியிருப்பதாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

உன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன? விஜய்சேதுபதிக்கு பார்த்திபன் கேள்வி

விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

'ரேகை பாக்கலையோ ரேகை': கைரேகை ஜோஸ்யகாரரால் 13 பேர்களுக்கு பரவிய கொரோனா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்தது

போலீஸாரையே கொன்ற ரவுடிகள்: துரத்தி துரத்தி வேட்டையாடிய காவல் துறை!!! கருவறுத்த பரபரப்பு சம்பவம்!!!

கடந்த வெள்ளிக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு பகுதியில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை பிரபல ரவுடிகள் சுட்டுக் கொன்றனர்.

திருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா? கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை!

திருமணத்திற்குப் பின்னர் அனைத்து மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதில்லை