close
Choose your channels

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

Monday, March 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி அருகேயுள்ள உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் ஒரு சில இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து கொள்ளை அடிக்க வாய்ப்பு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அவர்கள் எச்சரித்தது போலவே தற்போது திருச்சி அருகேயுள்ள உறையூர் என்ற பகுதியில் பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை கடையின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தமிழககதில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள ஸ்டாக்குகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos