close
Choose your channels

சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

Sunday, August 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இருப்பினும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருவதை அடுத்து சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், சென்னையில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் எனவும் அறிவிப்பு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் டாஸ்மாக் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.