கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. அதேபோல அரசுகளுக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் தாராளமாக நிதியை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தற்போது கொரோனாவில் இருந்து மக்களை காப்பதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து டாடா டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவிலும் உலகெங்கிலும் தற்போதைய நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு டாடா ட்ரஸ்ட் குழுமத்தின் நிறுவனங்கள் தேசத்தின் தேவையை உணர்ந்து இந்த நேரத்தில் உதவி செய்ய முன் வருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேவைகளை சமாளிக்கவும், மனிதகுலம் கடினமான சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்த நிலையில் டாடா அறக்கட்டளை சார்பில் ரூபாய் 500 கோடி நிதி அளிக்கின்றது.

இந்தப் பணத்தின் மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணம் வாங்குவதற்கும், தனிநபர் சோதனையை அதிகரிக்க கருவிகளை பரிசோதனை செய்வதற்கும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வசதி அமைத்துக் கொடுப்பதற்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும். மேலும் டாடா குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த வைரஸை எதிர்த்து போராட தயாராக உள்ளது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

வெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!!! ராஜீவ் கவுபே கருத்து!!!

வெளிநாடுகளில் இருந்துவந்த பயணிகளைச் சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியிருப்பதற்கு காரணம் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே தெரிவித்துள்ளார்.

குமரியில் மூவர் உயிரிழந்தது எதனால்? சுகாதாரத்துறை விளக்கம்

கன்னியாகுமரி கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவர் உயிரிழந்தது

அமெரிக்கர்கள் நுழைய கூடாது என மெக்சிகோ போராட்டம்: தலைகீழாக மாறிய நிலை

'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்' என்று தமிழில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. அதைப்போல் மெக்சிகோ நாட்டவர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டின் வழியாக வரும்

கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்!!!  

கொரோனா Covid-19 உலகின் அனைத்து நிலைமைகளையும் கடுமையாகப் பாதித்துத் இருக்கிறது. சுற்றுச்சூழலைத் தவிர

கேரளாவில் கொரோனாவிற்கு முதல் பலி: துபாயில் இருந்து திரும்பியவர்

இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும் நேற்றுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.