தலைத் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியர்… உலகம் முழுவதும் விஷ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!!!

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

 

பிரான்ஸ் நாட்டில் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியில் நேற்று மாலை ஒரு ஆசிரியர் தலைத் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் பள்ளியின் அருகிலேயே நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கொலையை 18 வயதே ஆன ஒரு இளைஞன் நடத்தி இருக்கிறான் என்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியர் வரலாற்று பாடத்தை மாணவர்களுக்கு எடுக்கும்போது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை காட்டியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ஒரு இளைஞன் ஆசிரியர் வெளியே வந்தவுடன் அவரை தலையைத் துண்டித்து வெறிச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இளைஞனை பிடிப்பதற்காக போலீசார் முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

கடந்த 2015 இல் இஸ்லாம் மதத்தின் புனிதத் தலைவராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரம் சார்லி ஹெப்டோ எனும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது. இதையடுத்து அந்த பத்திரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அந்நிறுவன ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மேலும் அந்தப் பத்திரிக்கை நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டதைக் குறித்து இஸ்லாமிய அமைப்புகள் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த வகையில் தற்போது இரண்டாவது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் ஒரு வரலாற்று ஆசிரியர் பள்ளிக்கு எதிராகவே தலைத் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

More News

'காந்தி' படத்தை ரசித்த மக்கள் தான் ஹிட்லர் படத்தையும் ரசித்தார்கள்: '800' படம் குறித்து சரத்குமார்

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,

எவ்வளவு விளக்கமளித்தாலும்‌ எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த முடியாது: முத்தையா முரளிதரன் அறிக்கை

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில்

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் விலகல்: புதிய கேப்டன் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடந்து வரும் நிலையில் இன்று கொல்கத்தா அணி, மும்பை அணியுடன் மோத உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் தேர்வு! யார் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.