நீட் தேர்வில் சாதனை: சத்தியத்தை நிறைவேற்றிய சபரிமாலா 

  • IndiaGlitz, [Monday,October 19 2020]

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூர் அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த சபரிமாலா என்ற அரசு பள்ளி ஆசிரியை அரசுப் பள்ளி மாணவர்களை நீட் தேர்வில் வெற்றி பெறச் செய்வேன் என்ற சவால் விடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் அவர் கடந்த ஆண்டு ஆடு மேய்க்கும் நபர் ஒருவரின் மகனான ஜீவித்குமாரை தான் நீட் தேர்வுக்காக படிக்க வைப்பதாக முடிவு செய்து அவரை நீட் தேர்வில் வெற்றி பெற வைப்பேன் என்று சவால் செய்தார்.

ஜீவித்குமாரும் தனக்கு வழிகாட்டுதலுக்கு ஆள் இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் ஒரு ஆண்டு கோச்சிங் சென்டரில் ஜீவித்குமாரை படிக்க வைத்த சபரிமாலாவின் உதவியால் இன்று அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 664 மதிப்பெண்களை ஜீவித்குமார் நீட் தேர்வில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களையும் நீட் தேர்வில் வெற்றிபெற செய்வேன் என சத்தியம் செய்து சவால் விட்ட சபரிமாலாவின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது. இதனை அடுத்து மாணவர் ஜீவித்குமாருக்கும், அவரது சாதனைக்கு உதவிய சபரிமாலாவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

இன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படுவது வழக்கம்

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இணையும் ஜெயம் ரவி மற்றும் தமன்னா!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜெயம் ரவி மற்றும் தமன்னா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

வெளியேறினார் ரேகா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா வெளியேறிவிட்டதை அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது

அறிமுக இயக்குனருக்கு ஆதரவு கொடுத்த விஜய் மனைவி: வைரலாகும் புகைப்படம்

நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்றும் அவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் 'கண்ணாமூச்சி' என்றும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்