விஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தற்போது பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைகள் மூலம் மாணவர்களுக்கு வீடியோ மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வகுப்பறையில் அமைக்கப்பட்டிருந்த கணினி திரையில் விஜய் படத்தை திரையிட்டதாக ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவிலூர் அருகே சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் சமீபத்தில் கணினித்திரை வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் எட்வர்ட் விக்டர்பாபு என்பவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கணினித்துறையில் விஜய் நடித்த நண்பன் திரையிட்டு தாக்கியதாக புகார் வந்தது.

இதுகுறித்து விசாரணை செய்த கல்வி அலுவலக அதிகாரிகள் இந்த புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிரியர் எட்வர்ட் விக்டர்பாபுவை சஸ்பெண்டு செய்தனர். விஜய் படத்தை திரையில் ஒளிபரப்பிய ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.