close
Choose your channels

துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி!

Tuesday, January 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று டிக் டாக் வீடியோ எடுக்க முயன்ற 18 வயது வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் டிக்டாக்வீடியோ எடுப்பதற்காக போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது தந்தையின் துப்பாக்கியை தாயாரிடம் இருந்து வாங்கியுள்ளார். அந்த தாயார், துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்ட இருப்பதை அறியாமல் மகனிடம் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தாயார் சமையலறையில் வேலை செய்ய கிளம்பிய நிலையில் அந்த இளைஞன் தன்னைத்தானே சுட்டுக் கொள்வது போன்று டிக்டாக் வீடியோ எடுத்த முயற்சித்துள்ளார். அப்போது உண்மையாகவே அவர் சுட்டுக்கொள்ள ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த தாயார் உடனடியாக தனது மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அந்த இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அந்த தாயார் அதிர்ச்சியில் உறைந்தார்.

டிக்டாக்வீடியோவால் தினமும் பல்வேறு சோகமான, அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.