close
Choose your channels

ஆன்லைன் வகுப்புக்காக தந்தையின் செல்போனை வாங்கிய மகள்: வெளிச்சத்துக்கு வந்த கள்ளக்காதல்!

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைன் வகுப்புக்காக தந்தையிடமிருந்து செல்போனை வாங்கிய மகள் ஒருவர் தந்தையின் கள்ளக்காதலை அந்த செல்போன் மூலம் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா என்ற பகுதியில் உள்ள மாணவி ஒருவர் தன்னுடைய ஆன்லைன் வகுப்புக்கான தந்தையின் செல்போனை வாங்கி உள்ளார். அப்போது அவர் தற்செயலாக அந்த செல்போனில் உள்ள வீடியோக்களை பார்த்தபோது தனது தந்தைக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த விஷயத்தை தனது தாயாரிடம் கூறினார்

தாயாரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையம் சென்று தனது கணவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் இருப்பினும் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க தயார் என்றும் காவல் நிலையத்தினர் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் விடாப்பிடியாக அந்தப் பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறியதை அடுத்து தற்போது விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 18 ஆண்டுகள் கணவன் மனைவி உறவு தற்போது முடிவுக்கு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆன்லைன் வகுப்புக்காக மகளுக்கு செல்போனை கொடுத்ததால் வெளிச்சத்துக்கு வந்த கள்ளக்காதலால் அந்த நபர் தற்போது பெரும் சோகத்தில் உள்ளார். அவர் தனது மனைவியுடனும், இரண்டு குழந்தைகளுடனும் வாழ ஆசைப்படுவதாகவும், தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படியும் அவர் கூறி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.