கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த நிலையிலும் டிக்டாக்: இளம்பெண்களின் அட்டகாசம்!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

அமெரிக்காவில் 16 வயதேயான இரண்டு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் அந்த கார் கவிழ்ந்தது. இதனை அடுத்து காரிலிருந்து வெளியே வர முடியாமல் அந்தப் பெண்கள் தவித்தனர். இந்த நிலையில் தங்களுடைய நிலை குறித்து அவர்கள் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து தங்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் போலீசார் வரும் வரை காருக்குள் போரடித்ததாலும் விபத்தின் பதட்டத்தை போக்குவதற்காகவும் அந்த இரண்டு பெண்கள் டிக் டாக் வீடியோ ஒன்றை காருக்குள்ளேயே இருந்து எடுத்து அதனை பதிவு டிக்டாக் செயலியில் பதிவு செய்தனர்

இந்த வீடியோ பயங்கர வைரலாகியுள்ளது. இருப்பினும் கார் விபத்துக்குள்ளான நேரத்திலும் டிக்டாக் வீடியோவா? உங்கள் அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா? என்று பலர் அந்த இரண்டு பெண்களை விமர்சனம் செய்து வருகின்றனர்

இதனையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த போலீசார் அந்த இரண்டு பெண்களையும் மீட்டு அவர்களிடம் விபத்து குறித்து விசாரணை செய்தனர்

More News

வெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பார்ட்டி' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு'

கடன் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியவரை, கத்தி மற்றும் துப்பாக்கியுடன் சென்று வங்கிக்குள்ளேயே தாக்குதல் நடத்தியவர் கைது..!

கோவையில் கனரா வங்கி கிளைக்குள் ஏர்கன் மற்றும் கத்தியுடன் நுழைந்த ஒருவர், கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய இடைத்தரகர் மற்றும் அவரை காப்பாற்ற வந்த மேனேஜரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன் கைது!

மனைவியை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

வயலில் இறங்கி வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: அதிர்ச்சியில் விவசாயி 

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வெங்காயம் பயிர் செய்து இருந்த நிலையில் நேற்று இரவு நேற்று திடீரென மர்ம நபர்கள் சிலர்