close
Choose your channels

சீரியல் நடிகை தற்கொலை: 2 காதலர்கள் கைது, 3வது காதலர் தலைமறைவு!

Tuesday, September 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

ஐதராபாத்தை சேர்ந்த டிவி நடிகை ஸ்ராவனி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய்ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். ஸ்ராவனிக்காக சாய்ரெட்டி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்ராவனியை திருமணம் செய்து வைக்கவும் அவரது பெற்றோர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென சாய்ரெட்டியுடன் ஏற்பட்ட உறவில் முறிவு ஏற்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலமான தேவராஜ் ரெட்டி என்பவருடன் ஸ்ராவனிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும்போது ஸ்ராவனியை ஆபாசமாக தேவராஜ் ரெட்டி வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை காட்டி ஸ்ராவனியை மிரட்டி பணம் பறித்ததாகவும், அதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவரை ஸ்ராவனி சந்தித்து உள்ளார். அவரை கதாநாயகியாக்க போவதாக ஆசை வார்த்தை கூறிய அசோக்குமார் அதன் பின்னர் அவரை பயன்படுத்திவிட்டு கைவிட்டதாகவும் தெரிகிறது

இதனால் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதாலும், ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டப்பட்டதாலும், ஏற்பட்ட மன உளைச்சலில் ஸ்ராவனி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ராவனி பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் இரண்டு காதலர்களான சாய்ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர் என்றும், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.