close
Choose your channels

மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Wednesday, April 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலக மாஸ் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரையும் பாதித்த கொரோனா தற்போது அல்லு அர்ஜுனையும் தாக்கியுள்ளது.

இதுகுறித்து அல்லு அர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதை அடுத்து நான் வழிகாட்டு நெறிமுறையின்படி வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும் அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் எனது ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் மிகவும் நலமுடன் தான் இருக்கிறேன், எனக்கு எந்தவித ஆபத்தும் இல்லை’ என்று கூறியுள்ளார். அல்லு அர்ஜூனனுக்கு கொரோனா பாதிப்பு என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் சோகமாக இருந்தாலும் அவர் நலமுடன் இருப்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.