பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய 73 வயது நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பெண்களின் வாழ்க்கை முறை முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூகத்தில் உயர்ந்த பதவிகள் பெற்று சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பெரும்பாலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தவிர்க்கப்பட்டும் வருகிறது.

ஆனாலும் ஒரிசில நபர்கள் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொதுநிகழ்ச்சியில் அல்லது பேட்டியில் பேசி வாங்கி கட்டிக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை சந்தித்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ஒருவர் பெண்கள் மற்றும் படுக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி சிக்கலில் மாட்டியுள்ளார்

73 வயதான பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதிராவ் என்பவர் சமந்தாவின் வருங்கால கணவர் நாகசைதன்யா நடிப்பில் நாகார்ஜூனா தயாரிக்கும் புதிய திரைப்படமான 'ராரண்டோய் வேதுகா சுதம்' என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பெண்களால் மன அமைதி கெடும் என்று இந்த படத்தில் நாக சைதன்யா வசனம் பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.

இவருடைய பேச்சு படக்குழுவினர்களை மட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது பேச்சுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து நாகார்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நான் தனிப்பட்ட முறையில் மற்றும் என் படங்களில் எப்பொழுதுமே பெண்களை மதிப்பவன். நான் சலபதி ராவின் பேச்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

More News

கோலிவுட் திரையுலகில் நடந்த இரண்டாவது அதிசயம்.

கடந்த சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி நடித்த படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது அதே கட்சி ஆட்சி புரிந்தாலும் இந்த விஷயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது...

லைகா நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது...

உதட்டு முத்தக் காட்சியில் சிபிராஜ் நடிக்க மறுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் அனுமதி பெற்று 'சத்யா' டைட்டிலை பெற்ற படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர்...

பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் புகழின் உச்சத்தை அடைவார்கள் என்பது உறுதி. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களில் ஒருவரான ரோ

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு, பாடதிட்டம் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த இரண்டு வகுப்புகளிலும் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.