தெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்

தமிழைப் போலவே தெலுங்கிலும் ரவி தேஜா நடித்து வரும் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் அங்கு அவர் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன் இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது ’தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது எனக்கு எப்போதும் மகிழ்வான ஒன்று தான். நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவின் ரசிகர்கள் எனக்கு அன்பு, ஆதரவு கொடுத்துள்ளார்கள். மேலும், இங்கிருந்துதான் என்னுடைய சினிமா வெற்றி தொடங்கியது. எனவே, தெலுங்கும் எனக்கு ஒரு வீடு போலத்தான்,” என்று அவர் பேசியுள்ளார்.
 

More News

ரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி!

சமூக வலைதளங்களில் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் எவ்வாறு மோதிக் கொள்கின்றார்களோ அதேபோல் பல ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்

நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி

மைக்ரோசாஃப்ட் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார்.