போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தலைவர் சிவாஜிராஜா, பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ''ரேவ் பார்ட்டி என்று கூறப்படும் போதை நடனப்பார்ட்டி என்ற கலாச்சாரம் மும்பையில் உள்ள ஒருசில தனியார் விடுதிகளில் நடைபெற்று வருகிறது. இது ஐதராபாத்துக்கு பரவ வேண்டாம். எனக்கு தெரிந்து சுமார் பத்து முன்னணி நடிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் சினிமாத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவர்கள் இந்த பார்ட்டியை நடத்துவதாக நினைத்து கொண்டிருந்தாலும் காவல் துறையினர்கள் அனைத்தையும் கண்காணித்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை மறந்துவிட கூடாது.
எனவே போதைக்கு அடிமையாகியுள்ள இளம் நடிகர்கள் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் தங்களுடைய பழக்கத்தை மாற்றி கொள்வது நல்லது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

More News

இந்து மக்கள் கட்சிக்கு கமலின் சாட்டையடி பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டை கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

நீதியின் முன் அனைவரும் சமம்: திலீப் கைது குறித்து பிரபல தமிழ் நடிகை

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அடிப்படையான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கரின் அடுத்த படத்தில் 3 வடிவேலு?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார்...

சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது...

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'க்கு இன்று பூஜை

ஒரு படத்தின் பூஜை போட்டவுடன் பார்ட்டி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஆனால் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு வித்தியாசமாக 'பார்ட்டி'க்கு பூஜை போட்டுள்ளார். ஆம், வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படமான 'பார்ட்டி' என்ற படத்திற்கு இன்று சென்னையில் பூஜை நடத்தப்பட்டது...