close
Choose your channels

லாக்டவுனால் வேலையில்லை: விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி!

Friday, August 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இழந்து உள்ளனர் என்பதும் பலர் வேலை இல்லாமல் வறுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ள சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வேலையில்லாததால் கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானாவை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்ற 25 வயது இளைஞர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த நந்தினி என்ற பெண்ணை அவர் காதலித்தார். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தெலுங்கானாவில் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டு வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு கொடைக்கானல் வந்தனர்

கொடைக்கானலில் உள்ள காட்டேஜ் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வெளிநாடு உட்பட பல இடங்களுக்கு வேலைக்கு அப்ளை செய்தனர். இந்த நேரத்தில் திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நான்கு மாதங்களாக இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. செலவுக்கும் காசு இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல கூட முடியாமல் சிக்கலில் இருந்தனர்.

இந்த நிலையில் நந்தினிக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. உதவிக்கும் யாருமே இல்லை என்பதால் மனமுடைந்த இருவரும் காபியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் 

காட்டேஜில் இருந்த காதல் ஜோடி இரண்டு நாளாக வெளியே வராததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் சடலமாக இருந்தனர். அதன்பின் காவல்துறையினர் இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி, தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

லாக்டவுன் காரணமாக வேலை இழந்த காதல் ஜோடி, நல்ல வேலை கிடைத்தும் கையில் காசு இல்லாததால் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாத நிலைமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.