உருவக்கேலி விவகாரம்: சாய்பல்லவிக்கு ஆதரவாக பேசிய தமிழிசை செளந்திரராஜன்!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

சமீபத்தில் சாய் பல்லவி நடித்த தெலுங்கு திரைப்படமான ’சியாம் சிங்கா ராய்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து சாய்பல்லவி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் கூட நடத்தப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சாய் பல்லவிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, ‘உருவத்தை வைத்து கேலி கிண்டல் செய்யும் அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன் என்றும், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளேன் என்றும், ஆனால் என்னுடைய திறமையாலும், அதிக பணியாலும், உழைப்பாலும் அந்த காயங்களை ஆற்றினேன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம் அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான முயற்சி செய்கிறது என்றும், சாய்பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல் தான் என்றும், ஆனால் அதையெல்லாம் மீறி அவர் கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்ப்பதை விட முன்னேறுவார் என்றும் சாய் பல்லவிக்கு ஆதரவாக ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் பேசியுள்ளார். இந்த கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News

கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அமைச்சர் விளக்கம்!

கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும்

ஆண் குழந்தைக்குத் தந்தையான பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர்… வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும்

இந்த ஆண்டு பத்ம விருதை நிராகரித்த சினிமா பிரபலங்கள்!

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள்

பாட்டியுடன் “புஷ்பா“ பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும்

22 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமல் படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற ஷாருக்கான்!

22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.