close
Choose your channels

உருவக்கேலி விவகாரம்: சாய்பல்லவிக்கு ஆதரவாக பேசிய தமிழிசை செளந்திரராஜன்!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சாய் பல்லவி நடித்த தெலுங்கு திரைப்படமான ’சியாம் சிங்கா ராய்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து சாய்பல்லவி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் கூட நடத்தப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சாய் பல்லவிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, ‘உருவத்தை வைத்து கேலி கிண்டல் செய்யும் அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன் என்றும், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளேன் என்றும், ஆனால் என்னுடைய திறமையாலும், அதிக பணியாலும், உழைப்பாலும் அந்த காயங்களை ஆற்றினேன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம் அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான முயற்சி செய்கிறது என்றும், சாய்பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல் தான் என்றும், ஆனால் அதையெல்லாம் மீறி அவர் கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்ப்பதை விட முன்னேறுவார் என்றும் சாய் பல்லவிக்கு ஆதரவாக ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் பேசியுள்ளார். இந்த கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.