ஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 1400 கிலோ மீட்டருக்கு அப்பால் ஊரடங்கு உத்தரவு காரணமாக தவித்த மகனை ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்ற இளைஞர் மருத்துவ பயிற்சிக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர் சொந்த ஊர் திரும்பாமல் மாட்டிக்கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட அவரது தாய் தனது மகனை மீட்க தனது ஸ்கூட்டியில் பயணம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் காவல்துறையினர்களிடம் சென்று அனுமதி அட்டை வாங்கி கொண்டு ஸ்கூட்டியிலேயே மகனை மீட்க ஐதராபாத்தை நோக்கி சென்றார்.

தனி நபராக இரவு பகல் பாராமல் தைரியமாக ஸ்கூட்டியில் ஐதராபாத் சென்ற அந்த தாய், அங்கிருந்த தனது மகனை அழைத்து கொண்டு மீண்டும் தனது சொந்த ஊர் நோக்கி பயணம் செய்தார். ஏப்ரல் 6ஆம் தேதி அவர் பயணத்தை தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி மகனுடன் பத்திரமாக வீடு திரும்பினார். இதுகுறித்து அந்த தாயார் கூறும்போது ’ஒரு ஸ்கூட்டியில் தனியாக இரவில் பயணம் செய்வது என்பது கடினமான விஷயம்தான். ரொம்ப பயமாக இருந்தது. இருப்பினும் மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் எனது அனைத்து பயத்தையும் போக்கியது என்று அந்த தாய் கூறியுள்ளார். மகனை மீட்க 1400 கிமீ தனி ஆளாக சென்ற வீரத்தாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

ரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது

மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக நேபாளி ஒருவர் பணி செய்து கொண்டு வருகிறார். அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன்

வீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை பலர் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

யோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சினிமா படப்பிடிப்பை நம்பி வாழும்

த்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அதன் பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் விலகிவிட்டார்