மாநகராட்சிகளில் கோவில், தர்கா, சர்ச் திறப்பது குறித்து முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 10.8.2020 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத்‌ தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும்‌, சிகிச்சைகளை அளித்தும்‌, நிவாரணங்களை வழங்கியும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. நோய்த்‌ தொற்றின்‌ போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின்‌ ஒத்துழைப்பையும்‌, நோய்த்‌ தொற்றின்‌ நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டு, ஊரடங்கில்‌ படிப்படியாக தளர்வுகள்‌ வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோயில்கள்‌, சிறிய மசூதிகள்‌, தர்க்காக்கள்‌, தேவாலயங்கள்‌ ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோயில்கள்‌; அதாவது, 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோவில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்க்காக்களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ 10.8.2020 முதல்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம்‌ பெற வேண்டும்‌. மற்ற மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடம்‌ பெற வேண்டும்‌.

அரசு வெளியிடும்‌ நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும்‌ ஒட்டுநர்‌ பயிற்சி பள்ளிகள்‌ 10.8.2020 முதல்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கொரோனா நோய்‌ பரவலை கட்டுப்படுத்த, அரசின்‌ நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள்‌ கடைபிடிக்கவும்‌, ஒத்துழைப்பு வழங்கவும்‌ பொதுமக்களை அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

கணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் திங்களன்று 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன.

கருப்பு பெட்டி கிடைத்தது: கேரள விமான விபத்திற்கான காரணம் என்ன?

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிகள்!!! ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 உலகக்கோப்பை குறித்தான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா!!! 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!! முதல்வரின் அடுத்த அதிரடி!!!

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி (EV) பூங்கா அமைக்கப் படவுள்ளது.

மும்பை வெள்ளம்: 5 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் துப்புரவு பணியாளர்

மும்பையில் ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.