பள்ளி மாணவியை கடித்த பாம்பு! ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

10 வயது பள்ளிச் சிறுமியை பாம்பு கடித்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 10 வயது ஷீலா என்ற சிறுமி படித்து வந்தார். இவர் வகுப்பறையில் இருந்தபோது திடீரென அங்கு புகுந்த பாம்பு ஒன்று ஷீலாவை கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷீலா வலி தாங்க முடியாமல் வகுப்பு ஆசிரியரிடம் இது குறித்து கூறியுள்ளார். ஆனால் சிறுமி பாம்பு கடித்ததாக ஏமாற்றுவதாக கூறி அவரை வகுப்பறையிலேயே உட்கார வைத்திருந்தார்.

சில நிமிடங்களில் ஷீலாவின் கால்கள் நீல நிறமாக மாற தொடங்கியதும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அது குறித்து வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னரும் செவிமடுக்காத ஆசிரியர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வகுப்பறையிலேயே உட்கார வைத்து இருக்கின்றார்.

மாணவியின் தந்தை அவசர அவசரமாக வந்து ஷீலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். எனினும் பாம்பு கடித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டதால் விஷம் உடல் முழுவதும் பரவி விட்டதாகவும் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு செல்லும் படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கோழிக்கோடு மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அந்த சிறுமி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

பாம்பு கடித்த உடனே ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் பலி ஆகி இருக்காது என்றும் ஆசிரியரின் அலட்சியத்தால் ஒரு பள்ளி மாணவியின் உயிர் பலியாக இருக்கிறது என்றும் ஷீலாவின் வகுப்பு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷீலாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில்

ரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார்.

ஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்

கோல்டன் ஐகான் விருதை பெற்று இன்று சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, '2021 ஆம் ஆண்டு நடைபெறும்

யார் முதல்வர் வேட்பாளர்? பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால்,

காதலில் வெற்றி பெற விஷம் குடித்த வாலிபர்: அதிர்ச்சியில் மனைவி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வேறு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர்.