14 வயது சிறுமியின் பாலியல் வழக்கு… சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவரும் யாஷிர் ஷா, 14 வயது சிறுமி அளித்த பாலியல் புகார் ஒன்றில் தொடர்பு கொண்டிருப்பது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதான யாஷிர் ஷா பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருப்பதோடு லெக் ஸ்பின்னராக குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலகச் சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2014 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வரும் இவர் இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் இஸ்லாமாபாத், ஷாலிமார் காவல் நிலையத்தில் யாஷிர் ஷா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் பர்ஹான் ஆகிய இருவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தப் புகாரில் யாஷிர் ஷாவின் நண்பர் பர்ஹான் தன்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறிய அந்த சிறுமி இதுகுறித்து யாஷிர் ஷாவிடம் உதவிக்கேட்டபோது, பர்ஹானுக்கு சிறுமி என்றால் அதிகம் பிடிக்கும். இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம், தனக்கு உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும், ஒருவேளை இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று தன்னை மிரட்டியதாக சிறுமி தெரிவித்து உள்ளார்.

மேலும் ஷாலிமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தப்பின்பு சிறுமியைத் தொடர்பு கொண்ட யாஷிர் ஷா இது சம்பந்தமாக மவுனமாக இருந்துவிட்டால் ஒரு வீடு மற்றும் மாதம் மாதம் செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறியதாகவும் தற்போது சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதனால் பாலியல் வன்கொடுமைக்கு உதவியது, கொலை மிரட்டல் போன்ற குற்றத்திற்காக யாஷிர் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 14 வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் முன்னணி யாஷர் ஷா சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டிற்கு யாஷிர் ஷா இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தாவின் கூல் பதில்!

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூலாக பதில் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

சசிகுமாரின் 21வது படத்தின் சூப்பர் அப்டேட்!

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நயன்தாரா படத்தை பார்த்து பாராட்டினாரா ரஜினிகாந்த்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் படத்தை பார்த்து மிரண்டு போய் அந்த படத்தின் குழுவினர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

கமல்ஹாசனுடன் முதல்முறையாக சிவகார்த்திகேயன் இணைய உள்ளார் என்ற செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.