ஆன்லைன் பைரஸியை சமாளிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் புது ஐடியா

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

திரைத்துறையினர் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஆன்லைன் பைரஸி உள்ளது. படம் வெளிவந்த மறுநாளே ஆன்லைனில் படம் வெளியாகிவிடுவதால் மிகப்பெரிய அளவில் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஆன்லைன் பைரஸியை கட்டுப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புதிய ஐடியா ஒன்றை தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளது. தற்போது புதியதிரைப்படங்களை உரிமை பெற்று வெளியிட ஒருசில ஆன்லைன் நிறுவனங்கள் தயாராகவுள்ளன. அந்த நிறுவனங்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொண்டால் ஆன்லைன் பைரஸியை தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' மற்றும் விஷாலின் 'துப்பறிவாளன்' நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் வெளியிடும் உரிமை, தொலைக்காட்சிகளில் வெளியிடும் உரிமை போல ஆன்லைனில் வெளியிடும் உரிமையையும் விற்பனை செய்து தயாரிப்பாளர்கள் கூடுதல் வருமானம் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

More News

கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய தவறுகள் நிறைய உள்ளன: தமிழிசை

கடந்த சில மாதங்களாகவே பாஜகவினர் அரசியல் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்யாமல் நடிகர்களை எதிர்த்தே அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன்,

மெர்சலுக்கே இப்படின்னா 'பராசக்தி' இன்று வந்திருந்தால்? ப.சிதம்பரம்

தளபதி 'மெர்சல்' படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களை விட இலவச புரமோஷன் செய்து வரும் அரசியல்வாதிகளுக்குத்தான் உண்மையில் 'மெர்சல்' படக்குழுவினர் நன்றி கூற வேண்டும்...

மெர்சலுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன்

பொதுவாக விஜய் நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பு பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். ஆனால் 'மெர்சல்' திரைப்படம் மட்டும் ரிலீசுக்கு முன்பும், பின்பும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

'மெர்சல்' படம் பார்த்து பாராட்டு தெரிவித்த வைகோ

'தளபதி' விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி ஒரு சமுதாய பிரச்சனையாக கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

'மெர்சல்' விவகாரம்: எச்.ராஜாவுக்கு தணிக்கை அதிகாரி பதில்

மத்திய அரசு அறிமுகம் செய்த ஜிஎஸ்டி வரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் செய்த போராட்டம் கொடுக்காத விழிப்புணர்வை தளபதி விஜய்யின் ஒரே ஒரு திரைப்படம் மக்களுக்கு கொடுத்துவிட்டது.