அந்த 25 நிமிடங்கள் தான் படத்தின் ஹைலைட்.. 'வாடிவாசல்' அப்டேட் கொடுத்த தாணு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
ஆனால் தற்போது தான் இந்த படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த படத்தின் ஒரு சிங்கிள் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக ஜி.வி. பிரகாஷ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும், அதன் பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரு பாடல் ரெக்கார்டிங் முடிந்துவிட்டது என்றும், அந்த பாடலை கேட்டதும் ஆச்சரியப்படும்படியாக இருந்தது என்றும், அந்த பாடலை எழுதியவர் யார் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் வெற்றிமாறனை சந்தித்தபோது, இந்த படத்தின் 25 நிமிட காட்சிகளை தன்னிடம் கூறியதாகவும், அந்த 25 நிமிட காட்சிகளே இந்த படத்தின் ஹைலைட் என்றும், பார்வையாளர்கள் நிச்சயம் அந்த காட்சிகளை பார்த்து பிரமிப்பான அனுபவத்தை பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த அளவுக்கு திரைக்கதை மிகவும் அருமையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேட்டியில் உள்ள கருத்துகளை பார்க்கும்போது, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
தற்போது சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments