ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து அந்நாட்டின் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடைகள், மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அந்நாட்டின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது பார்கள், இரவு நேரம் நடன விடுதிகள் ஆகியவையும் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாலியல் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்களும் தற்போது மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த 37 நாட்களாக தாய்லாந்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் பாலியல் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒருசில தளர்வுகளுடன் கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று பாலியல் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் போது மாஸ்க் அணிந்து ஈடுபட வேண்டும் என்றும், பார்களில் நடனமாடுபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நடன கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து நடனத்தை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 

More News

தமிழகத்தில் முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற மகன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கொடுமை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் மனிதர்களின் குணங்கள், நடவடிக்கையே மாறிவிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

'கோப்ரா' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டையும் பரிசையும் பெற்ற மாற்றுத்திறனாளி சிறுமி

ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியான உடன் அந்த பாடல்களை அச்சு அசலாக அப்படியே பாடி சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருவது கடந்தசில வருடங்களாக நடந்து வருகிறது.

கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் அதன் பின்னர் விஜய் நடித்த 'வேலாயுதம்' மற்றும் 'சச்சின்' ஆகிய

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்