close
Choose your channels

படமெடுக்கும் பாம்பு கூட கல்யாணம்… கற்பனையை மிஞ்சும் உண்மை சம்பவம்!!!

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படமெடுக்கும் பாம்பு கூட கல்யாணம்… கற்பனையை மிஞ்சும் உண்மை சம்பவம்!!!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள இளைஞர் ஒருவர் விஷமுடைய பாம்பை திருமணம் செய்து கொண்டு அதோடு குடித்தனம் நடத்தி வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இச்சம்பவம் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போன தனது காதலிதான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் எனக் கூறி அதிக விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பை திருமணம் செய்து இருககிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய காதலி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அந்த இளைஞர் இந்தப் பாம்பை பார்த்திருக்கிறார். தன்னுடைய காதலிதான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் எனக் கூறி 10 அடி நீளம் கொண்ட அதிக விஷத்தன்மைக் கொண்ட ஒரு பாம்பை திருமணம் செய்துகொண்டு மனைவியைப் போலவே தன்னுடைய வீட்டில் வைத்திருக்கிறார்.

அந்தப் பாம்பும் இளைஞருடன் அன்பாக பழகி வருகிறது. கொடிய விஷமுடைய பாம்பாக இருந்தாலும் இதுவரையிலும் இளைஞருக்கு அந்தப் பாம்பு எந்த தீங்கும் செய்யவில்லை. ஆனால் ஒருவேளை மனைவிக்கு கோபம் வந்து லைட்டா கொட்டிட்டா என்னவாகும் என்பதுதான் தெரியவில்லை. இப்படித்தான் இச்சம்பவத்தை இணையத்தில் பார்க்கும் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.