தாய்லாந்தில் தமிழ் ஹீரோவின் படப்பிடிப்பு: கல்லெறிந்து படக்குழுவினரகளை விரட்டிய பொதுமக்கள்!

  • IndiaGlitz, [Sunday,May 15 2022]

தமிழ் ஹீரோவின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் படக்குழுவினரை கல்லால் எறிந்து விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த நடித்தவர் நடிகர் பரத். இவர் தற்போது ’ஆக்சன் 22’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் திடீரென பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டபோது, அங்கு உள்ள குகை ஒன்றில் 12 சிறுவர்கள் சிக்கிக் கொண்டதை மீட்பது குறித்த உண்மை கதை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன் திக்கொடி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிறுவர்களை காப்பாற்றும் அதிகாரியாக பரத் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை சம்பவம் நடந்த குகையில் எடுத்தால் தத்ரூபமாக இருக்கும் என முடிவு செய்த படக்குழுவினர் தாய்லாந்து அரசின் அனுமதியைப் பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த பகுதி மக்கள் தங்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்பை நடத்த விடுவோம் என்று தகராறு செய்தனர். இதனை அடுத்து படக்குழுவினர் பணம் தந்த நிலையில் அங்கு இருந்த இன்னொரு பிரிவினரும் பணம் கேட்டு தகராறு செய்தனர். படக்குழுவினர் பணம் தர முடியாது என்று சொன்னதால் அவர்கள் படக்குழுவினர் மீது கற்களை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தாய்லாந்து குகை போலவே ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த முடிவு செய்த படக்குழுவினர் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தாய்லாந்து சுற்றுலாத்துறை தகுந்த பாதுகாப்பு தருவதாகவும் இங்கேயே படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. படக்குழுவினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'விக்ரம்' ஆடியோ விழாவில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சப்ரைஸ்!

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியான விஜய் பட நடிகை!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

13 வருடங்களுக்கு பின் விஜய் படத்தில் இணையும் பிரபலம்!

13 வருடங்களுக்கு முன்னர் விஜய் நடித்த படத்தை இயக்கிய பிரபலம் ஒருவர் தற்போது விஜய்யின் 'தளபதி 66' படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

என் குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது: பிரபல பாடகி வருத்தம்!

எனது குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது என உலகப் புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் உலக சாதனை செய்த தமிழ்ப்படம்!

கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 17ஆம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் பங்கேற்க ஏஆர் ரகுமான், நயன்தாரா உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது