close
Choose your channels

நேற்று ரூ.25 லட்சம், இன்று ரூ.10 லட்சம்: தல அஜித்துக்கு குவியும் வாழ்த்து!

Saturday, May 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து திரையுலகினர் பலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதும் அவர்களில் தல அஜித் நேற்று ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியாக அளித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 25 லட்சம் கொடுத்த தல அஜித் இன்று திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் கொடுத்து உள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரைப்பட தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதை அடுத்தே, தொழிலாளர்களின் நலன் கருதி இந்த 10 லட்ச ரூபாயை அவர் நிதி உதவி செய்துள்ளார்.

பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு அஜித் 10 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் இந்த தொகை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் அஜித்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.