close
Choose your channels

மகள் பிறந்த நாளில் தல அஜித் செய்த மகத்தான காரியம்

Thursday, January 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடிகரின் பிறந்த நாள் மட்டுமின்றி நடிகரின் மகள் பிறந்த நாளையும் ரசிகர்கள் கொண்டாடுவது அனேகமாக தல அஜித்துக்கு மட்டுமே நடைபெறும் அதிசயமாக இருக்கும்

இந்த நிலையில் மகளின் பிறந்த நாளில் நீலாங்கரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தல அஜித், தானே தனது கையால் பிரியாணி செய்து அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து அந்த குழந்தைகள் இல்லத்தின் நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்துடன் கூறியதாவது:

இன்றிரவு நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை. புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்! (இன்று அவரது மகளின் பிறந்த தினம் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்துகொன்டேன்

அஜீத் பற்றி இதுபோல நிறைய விசயங்களை கேள்விபட்டிருக்கையில், அது நமக்கே நடப்பது ஒரு இனிமையான அனுபவம். நமக்கே சந்தோசமாய் இருக்கும்போது பசங்களின் சந்தோசத்தை கேட்கவும் வேண்டுமா? அவர் செய்தது மிகச்சிறிய விசயம் தான். ஆனால் அதை எல்லோரும் செய்துவிடுவதில்லையே! அதனால்தான் அவர் அஜீத்!

இவ்வாறு அந்த நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.