இவர்கள் மூவரும் நாணயத்தின் மூன்று பக்கங்கள்: 30 ஆண்டு திரையுலக வாழ்வு குறித்து தல அஜித்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக இதனை கொண்டாடி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அஜித் தான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் ’எனது ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகிய மூவரையும் ஒரே நாணயத்தின் 3 பக்கங்களாக நான் பார்க்கிறேன். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு மற்றும் வாழ விடு! எப்பொழுதும் என் அன்பு அனைவருக்கும் உண்டு’ என்று அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளார். அஜித் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து அஜீத் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான தகவல்: சீசன் 5 எப்போது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது

மிஷ்கின் படத்தில் இணைந்த 'சார்பட்டா பரம்பரை' நடிகர்!

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த ஆர்யா மட்டுமின்றி பசுபதி, துஷாரா

இடதுகால் தசைநார் சேதம்: 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

இடது காலில் தசைநார் சேதமடைந்த நிலையில் அந்த அதற்கு 21 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சிகிச்சை செய்யாமல் இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… மல்யுத்தப் பிரிவில் சாதனை படைத்த வீரர்!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ரவி குமார் தாஹியா அரையிறுதியில்