close
Choose your channels

தமிழகத்தில் எம்.எஸ்.தோனிக்கு சொந்த பள்ளி.. மாணவர்கள் வரவேற்பால் நெகிழ்ச்சி!

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனிக்கு தமிழகத்தில் சொந்த பள்ளி இருக்கும் நிலையில் அந்த பள்ளிக்கு வருகை தந்த அவரை மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

தமிழகத்திலுள்ள ஓசூர் பகுதியில் எம்எஸ் தோனிக்கு சொந்தமாக பள்ளி ஒன்று உள்ளது. எம்எஸ் தோனி குளோபல் பள்ளி என்றழைக்கப்படும் இந்த பள்ளியில் பாடங்கள் தவிர கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைப்பதற்காக எம்எஸ் தோனி வருகை தந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி இந்த பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் எம்எஸ் தோனி கலந்துகொண்டார். அவருக்கு மாணவர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்ததை அடுத்து அவர் மாணவர்களின் அருகில் உட்கார்ந்து கலந்துரையாடினார்.

ஏற்கனவே சூப்பர் கிங்ஸ் அகாடமி தமிழகத்தின் சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிலையில் தற்போது ஓசூரில் உள்ள எம்எஸ் தோனியின் பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பாட வகுப்புகள் முடிந்த பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்பதும் கிரிக்கெட் தொழில்முறை பயிற்சியும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.