close
Choose your channels

விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கிய தல தோனி!

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சென்னை அணியின் கேப்டன் தல தோனி தனது ஊருக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமான நேரம் கொஞ்சம் அதிகம் இருந்ததால் அதுவரை அவர் விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கியுள்ளார். பின்னர் தான் தூங்கியபோது எடுத்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில், 'ஐபிஎல் நேரத்திற்கு பழகப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும்" என்று பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் சரியான நேரத்தில் முடிவதில்லை என கிட்டத்தட்ட அனைத்து அணிகளின் கேப்டன்களுமே கூறியுள்ள நிலையில் தோனியும் அதற்கு ஆதரவான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

விமான நிலையத்தில் தோனி தரையில் படுத்து தூங்கிய எளிமையை பாராட்டி ஆயிரக்கணக்கானோர் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தோனி விமான நிலையத்தில் தூங்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.