close
Choose your channels

'தல' மாதிரியே 'தல' ரசிகர்களும் நல்லவங்க: பிக்பாஸ் அபிராமி

Monday, September 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் சென்னை இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இனிமேல் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது பேனர் வைப்பதில்லை என்று அறிவித்தனர். இப்படி ஒரு அறிவிப்பை முதலில் தெரிவித்தது மதுரை அஜித் ரசிகர்கள் தான்

இந்த நிலையில் அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்ட விழாவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்திற்கு பேனர் வைப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை இலவசமாக அஜித் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த மரக்கன்றுகள் அளிக்கும் விழாவை தொடங்கி வைத்த பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், 'தல மாதிரியே தல ரசிகர்களும் நல்லவங்க. தல ரசிகர்கள் இலவசமாக செடி கொடுத்து வருகின்றார்கள். இது உண்மையிலேயே நல்ல ஒரு விஷயம். இந்த உலகத்திற்கு ஆக்சிஜனையும் தண்ணீரையும் கொடுப்பது மரங்கள் தான். இதனை நாம் மறக்க கூடாது. ரசிகர்களின் இந்த செயல்களை தல பார்த்தால் உண்மையிலேயே பெருமைப்படுவார். இதை தொடர்ந்து செய்து வாருங்கள்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos