ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று முதல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் தொடங்கவுள்ளது. அதேபோல் இதே பின்னி மில்லில் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வருவதாகவும் இவ்வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனவே ஒரே இடத்தில் தல, தளபதி படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இம்முறை இவர்களின் சம்பிரதாய சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்...

டிரம்ப் அதிரடியால் கமல், விஜய், விக்ரம், தனுஷ் படங்களுக்கு பிரச்சனை?

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகிக்க முடியாத அளவில் அவருடைய அறிவிப்புகள் அதிரடியாக உள்ளது...

இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்த்த அதிபர் டிரம்ப்

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் கனவு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். லட்சக்கணக்கில் சம்பளம், வசதியான வாழ்க்கை ஆகியவையே இதற்கு காரணம். இதனால்தான் தினந்தோறும் அமெரிக்க தூதரகங்கள் முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதை பார்த்து வருகிறோம்....

அதிகாரிகள் முன் தாய்ப்பால் சுரந்து சோதனை. ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் என்ற விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அதிகாரிகள் முன் மார்பகத்தில் தாய்ப்பால் சுரந்து காண்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...

பிரபல தமிழ் நடிகையின் தாத்தா அடுத்த ஜனாதிபதியா?

கர்நாடக மாநில முதலமைச்சர், மகாராஷ்டிரா மாநில கவர்னர், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் இருந்த பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம்...