close
Choose your channels

தலைவன் தோனி இருக்க பயமேன்: சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி பேட்டி!

Monday, September 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியில் இருந்து விலகியது ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தலைவன் தோனி இருக்கும் போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ’சிஎஸ்கே அணி தற்போதும் பலமாகவே இருக்கிறது. அணியின் பலம் குறித்து எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. நம் அணியில் திறமையான கேப்டன் இருக்கிறார். இது போன்ற பல கடினமான நேரங்களை அவர் ஏற்கனவே சந்தித்தவர். தலைவன் தோனி அணியை பார்த்துக்கொள்வார் என்று கூறினார்.

மேலும் நேற்றிலிருந்து வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டார்கள் என்றும், வீரர்கள் அனைவரும் துடிப்புடன் இருப்பதாகவும், சமீபத்தில் ஜூன் ஆப் மூலம் உரையாடியபோது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது எண்ணத்தை பகிர்ந்தார்கள் என்றும் இந்த ஆண்டு நிச்சயம் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

மேலும் துபாய் உள்பட அனைத்து நாடுகளிலும் விரைவில் மஞ்சள் நிற ஜுரம் பற்றிக் கொள்ளும் என்றும் இந்த ஆண்டு கண்டிப்பாக சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.