close
Choose your channels

எனக்கு தமிழ் சொல்லி தாருங்கள்: தமிழ் நடிகரிடம் வேண்டுகோள் விடுத்த அக்சய்குமார்

Saturday, October 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற தமிழ் படத்திலும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான அக்சய்குமார் தற்போது ’பெல்பாட்டம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்காட்லாண்டில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் நடித்து வருகிறார். கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு பின் தொடங்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தையும் சமீபத்தில் தலைவாசல் விஜய் பேட்டி அளித்துள்ளார். நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லும்போது ஒரு வாட்ச் ஒன்றை கட்டிக் கொண்டு செல்வோம். அதில் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் லெவல், ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்தும் தெரியவரும்

மேலும் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்து இருப்போம். எங்களை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. எங்களுடைய செட்டில் எப்பொழுதும் ஒரு டாக்டர் இருப்பார். படப்பிடிப்பு செட் முழுவதும் தினமும் சானிடேஷன் செய்யப்பட்டது என்று அவர் படப்பிடிப்பு பாதுகாப்பு குறித்து கூறினார்

மேலும் அக்சய்குமார் குறித்து அவர் கூறியபோது ’அக்சய்குமார் அவர்களுடன் நான் பழகும் போது அவரிடம் இருந்த எளிமையை கண்டு ஆச்சரியப்பட்டேன். நான் என்னுடைய குழந்தைகள் நீச்சல் சாம்பியன்கள் என்று கூறியதை கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார். மேலும் அவர் தனக்கு சில தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கும்படி எனது கேட்டுக்கொண்டார். நானும் சொல்லி கொடுத்தேன். முதல்முதலாக அக்சய்குமார் அவர்களுடன் இணைந்து நடித்தபோது எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது’ கூறினார். தலைவாசல் விஜய்யின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.