close
Choose your channels

பூந்தமல்லி பள்ளியில் ஏற்பட்ட சர்ச்சை: தளபதி 64 படத்துக்கு சிக்கலா?

Thursday, December 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டும் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது. இந்த பள்ளியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், பள்ளி மாணவர்களை விஜய் சந்திக்க இருப்பதாக தெரிவித்து விட்டு அதன் பின் அவர் சந்திக்காமல் சென்று விட்டதாகவும் கூறப்பட்டது

மேலும் படப்பிடிப்பு குழுவினர்களால் பள்ளி வளாகம் அசுத்தப்படுத்தப்பட்டதாகவும் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படப்பிடிப்பால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? என பள்ளி முதல்வரிடம் மாற்றுத்திறனாளி நல ஆணையர் அறிக்கை கேட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை பொறுத்தே தளபதி 64 படக்குழுவினர் மீதும், படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த நிர்வாகிகள் மீதும் எடுக்கும் நடவடிக்கை குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.