close
Choose your channels

'தளபதி 65' நாயகி பூஜா ஹெக்டேவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ஜார்ஜியா படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆசிரியை ஜெஸிகா என்பவர் திடீரென காலமாகிவிட்டதாகவும், இந்த உலகம் ஒரு மிகப்பெரிய அறிவாளியை இழந்துவிட்டது என்றும், அவருடைய அன்பான முகம் கனிவான குரல் ஆகியவற்றை நான் என்றும் மறக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘சில ஆசிரியர்கள் சுத்தமான தங்கம் போல் இருப்பார்கள் அவர்களின் இவரும் ஒருவர் என்றும், என்னை நல்வழி படுத்தியதில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

‘தளபதி 65’ திரைப்படம் தவிர தெலுங்கில் அவர் பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.