மீண்டும் இணைகிறதா சர்கார் கூட்டணி?

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜயின் 64 வது படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அடுத்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

’தளபதி 65’ படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் ’துப்பாக்கி 2’ படமாக இருக்கலாம் என்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ’சர்க்கார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மீண்டும் இதே கூட்டணி இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'தர்பார்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத்தின் இசையில்

தமிழ்நாட்டின் 'CM விஜய்'...போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்..!

தமிழ்நாட்டின் CM விஜய் என ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்தே பத்து ஓட்டு மட்டுமே வாங்கி பஞ்சாயத்து தலைவி ஆன பெண்: எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு

சுறா கடித்து இழுத்துச் செல்லப்பட்ட நபர்.. போராடி மீட்ட கடலோர காவல்படை..! வீடியோ.

பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியது.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு மாட்டிய இளைஞர்: பெரும் பரபரப்பு

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் பேச மறுத்த ஆத்திரத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது