close
Choose your channels

கடவுள் மனித உருவில் வந்துள்ளார்: மனித நேயமுள்ள வீடியோவை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுள் மனித உருவில் வந்துள்ளார்: மனித நேயமுள்ள வீடியோவை வெளியிட்ட தளபதி 65 இசையமைப்பாளர்!

இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் இருந்து திடீரென குழந்தைகள் விளையாடும் சக்கர நாற்காலி ஒன்று வெளியே வந்து சாலையில் கடகடவென்று பள்ளத்தை நோக்கி ஓடுகிறது, அதில் ஒரு பச்சிளங்குழந்தை உள்ளது.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு அதை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே கவிழ்த்துவிட்டு அந்த குழந்தையை காப்பாற்ற ஓடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த சக்கர நாற்காலியை பிடித்து, அவர் குழந்தையை கையில் தூக்கியபோது, பின்னாடியே ஓடி வந்த அந்த குழந்தையின் தாயார் குழந்தையை வாங்கி கட்டி அணைத்துக் கொள்கிறார்

மனிதநேயமுள்ள அந்த இளைஞர் குழந்தையை காப்பாற்றிய இந்த வீடியோ கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ’தளபதி 65’திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன், ‘உண்மையில் கடவுளே நேரடியாகவே மனித உருவில் வந்தது போலிருந்தது. சூப்பர் மனிதன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.