தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு தடை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென குவைத் நாட்டில் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் குவைத் நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘பீஸ்ட்’ திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது .

ஏற்கனவே தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் ’எஃப்ஐஆர்’ மற்றும் மலையாளத்தில் வெளியான துல்கர்சல்மானின் ’குரூப்’ ஆகிய திரைப்படங்களுக்கு குவைத் அரசு தடைவிதித்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்: படப்பிடிப்பு ஆரம்பம்!

மஹா மூவீஸ் நிறுவனத்தின் நான்கு மொழி திரைப்படைப்பான  'சபரி' படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! 

ஆர்யா அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்றும் 'கேப்டன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்

நெல்சனின் 'தலைவர் 169' படத்தின் கதை இதுதானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்யும் வினய்: யார் அந்த நடிகை?

நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமந்தா-நாக சைதன்யாவை இணைத்து வைக்க பெண் இயக்குனர் முயற்சியா?

சமந்தா மற்றும் நாக சைதன்யாவை மீண்டும் இணைத்து வைக்க பெண் இயக்குனர் ஒருவர் முயற்சிப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.